மாங்கல்யம்

என் மனதில் ஒரு சந்தோஷம் புன்னகை , புது வாழ்வு அமையபோகுதுங்குற பெருமை. எனக்குள்ளே ஒரு புதிய உலகம் பிறந்தது போல ஒரு தைரியம். எனக்காகவும்  ஒருத்தி இருக்கிறாள் என்ற திமிரு . இன்னும்  15 நாட்களில் எனக்கு கல்யாணம், ரொம்ப விசேஷமாக  நடக்கனும்னு எதிர்பத்த கல்யாணம்.

            ஒருபுறம் ஏக்கமும்கூட , எனக்கு வயது ஆயிருச்சோங்கிற ஏக்கம் , என தோல் சுரின்கிருசேங்கிற ஏக்கம் வந்தது , 
         
         பரவாயில்லை நடக்கபோவது 60-வது கல்யாணம்தானே , தோல் சுருங்கினாதான் 60-வது கல்யாணக்கலை   வரும் !   மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டேன்.

     என்னவள் என் அருகில் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னும் 15 நாள்களில் 60-வது கல்யாணம் . 

 மனதுக்குள்ளே மாங்கல்யம் பாடினேன் , மனதுக்குள்ளே சந்தோஷமும் பட்றேன் . நிஜ வாழ்கையில் இல்லை .
 
   
    இந்த 60-வது வயதிலாவது என்னை உன்னிடம் கூட்டி செல்வாயா.....  

                                                                  .......வாழ்கிறேன் நான் ..........   

No comments:

Post a Comment