அம்மாவுக்காக நான்

அம்மா 
        நீ என்னை சுமந்த பிறவி பலனுக்காக 
  நான் உனது செருப்பாக பிறக்க வேண்டாம் .
         அவை வெறும் ஆறு மாதம் மட்டுமே உன்னை சுமக்கும் ..

 நான்  உனது மூக்கு'ஆக பிறக்க வேண்டும் 
         உனக்காக நான் சுவாசிப்பதற்கு ....      

தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!


அதிக நேரம் தூங்குவது  நல்லது அல்ல ,  
   ஒருவன் சராசரியாக 6 மணிநேரம் தூங்கலாம் . அதற்கு மேல் துங்குவது  உடலுக்கு சோர்வு அளிக்கும் . 
  
 நீண்ட நேரம் துன்குவதால் நமது உடல் சோர்வு ஆகிவிடும் . அதன் பக்கவிளைவாக  இதயம் பாதிக்க படும் . கண்ணுக்கு கீழே பழுத்து பெரிதாகிவிடும் , அது உங்களது அழகை கெடுக்கும் .

    துங்கும் போது வலது புறமும் , மேல் நோக்கியே படுக்கவேண்டும்  . இடது புறமும் கீழ் நோக்கியே படுத்தால்  இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும் .

   நீண்ட நேரம் துன்குவதால் அதிகமாக தலைவலி உண்டாகும் .மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கு  இதுவே முக்கிய காரணம்.

  துங்கும் போது  நமது கை , கால்கள் , முதுகு , மார்பு  இவைகள்  
 கட்டுப்பட்டு இருக்கும் . அதிக நேரம் தூங்கும்போது இவைகள்  எப்போதுமே சோம்பேறித்தனமாக மாறிவிடும் . 
  
  ஒருவன் வெற்றியை நோக்கும்போது தூக்கம் வராது . வாழ்கையில் தேடல் மிக முக்கியானது !.  தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!          

என் தாய் மண்

                      பிறந்த உடன் உன் மடியில் விழுகிறேன் 

                   என் தாய் மடியில் உறங்கியதை விட 
                          உன் மடியில்தான் அதிகம் உறங்கினேன் .

                 எனக்கு யாரும் இல்லாத நிலையில் 
                        எனக்காவும் நீ இருக்கிறாய் என்ற 
                                 நம்பிக்கை எனக்கு இருந்தது !
                            

                  உன் மேல் போடும் ஆட்டங்கள் பல 
                          உன்னால் போடும் சண்டைகள் சில ..

                 என் கண் அழகுக்காக உன்னால் 
                       மலரபட்ட ரோஜா செடிகளையும் 
                            மல்லிகை செடிகளையும் கண்டு 
                       என் கண்கள் உன்மேல் விளையாடுகிறது ..

                 சாதனைகளும் சோதனைகளும் வந்தாலும்  
                               உன் மடியில் சாய்கிறேன் ..

                  நான் தடுமாறி கீழே விழும்போது 
                          நீ என்னை தாங்கி  பிடிக்கிரையே 

                  உனக்கும் எனக்கும் என்ன சொந்தமோ                
                                             தெரியவில்லை !
                     நான் போடும் ஆட்டங்களையெல்லாம்  
                                  பொருத்து கொண்டு  கடைசியில் 
           என்னை உன் அடியிலே உறங்க வைக்கிறாயே ..   

அடிமை

ஒருவன் அமைதியாக இருக்கும் போது கூட 
                      அந்த அமைதிக்கு அவன் அடிமையாகிறான் !



பார்க்கும் பார்வையிலே உன்னை 
கொள்ள தெரிந்த எனக்கு 
உன் பேச்சிலே நான்அடிமையாகிறேனடி .. !


குறைந்த ஊதியத்திற்கு ஒருவன்  வேலைக்கு 
செல்கிறான் என்றால்,
 அவன் அங்கே அடிமையாக இருக்கிறான்... 

காதல் ஒரு ஆயுள் தண்டனை

தேடினேன் தேடினேன்..       
 கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தேடினேன்

 நீ என் இதயத்துக்குள் இருப்பது  தெரியாமல் 


காரணமே இல்லாமல் சண்டை போடுவது 

 உன்னை வெறுபேத்துவதற்குஅல்ல

உன்னிடம்  மனம் விட்டு 

பேசுவதை விட 

சண்டை போடும் சுகம்தான்  அதிகம்.. 



உன்னை காதலித்த பாவத்திற்கு எனக்கு 
    ஆயுல் தண்டனை கொடுத்தாயே ..!
என்னை காதலித்த பாவத்திற்கு 
  ஏன் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது  ?  

மாங்கல்யம்

என் மனதில் ஒரு சந்தோஷம் புன்னகை , புது வாழ்வு அமையபோகுதுங்குற பெருமை. எனக்குள்ளே ஒரு புதிய உலகம் பிறந்தது போல ஒரு தைரியம். எனக்காகவும்  ஒருத்தி இருக்கிறாள் என்ற திமிரு . இன்னும்  15 நாட்களில் எனக்கு கல்யாணம், ரொம்ப விசேஷமாக  நடக்கனும்னு எதிர்பத்த கல்யாணம்.

            ஒருபுறம் ஏக்கமும்கூட , எனக்கு வயது ஆயிருச்சோங்கிற ஏக்கம் , என தோல் சுரின்கிருசேங்கிற ஏக்கம் வந்தது , 
         
         பரவாயில்லை நடக்கபோவது 60-வது கல்யாணம்தானே , தோல் சுருங்கினாதான் 60-வது கல்யாணக்கலை   வரும் !   மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டேன்.

     என்னவள் என் அருகில் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னும் 15 நாள்களில் 60-வது கல்யாணம் . 

 மனதுக்குள்ளே மாங்கல்யம் பாடினேன் , மனதுக்குள்ளே சந்தோஷமும் பட்றேன் . நிஜ வாழ்கையில் இல்லை .
 
   
    இந்த 60-வது வயதிலாவது என்னை உன்னிடம் கூட்டி செல்வாயா.....  

                                                                  .......வாழ்கிறேன் நான் ..........   

பிச்சை

சாலையோரத்தில் இருந்து
  காசு கேட்கிறீர்களே !
நீங்களும் பிச்சைகாரர்கள்தானோ  ?



திருட்டை தடுக்க கட்டிடம் கட்டி
  திருடுறீர்களே
நீங்களும் கொள்ளைகாரர்கள்தனோ ?


http://www.chennaiblogs.in/2014/06/chennai-traffic-police-corruption-50rs-for-no-licence/

பிரிவு

நெருங்கினால் விலகிறாய்
               விலகினால் நெருங்கிறாய் 
 நீ என்ன தேய்பிறையா ?
           இல்லை வளர்பிறையா  ?
    
உனக்கென ஒருவர் இல்லாமல் போனாலும் 
  உனக்கென  நான் இருக்கேன் !
நமக்கென இருக்கிற ஆகாயம்,பூலோகம் நம்மை விட்டு போய்விடுமோ ?
    நாம் இறந்தால் மட்டுமே நம்மை விட்டு போகும் !
 அப்போதுகூட என்னோடு இருந்து 
   உன்னை  வழி அனுப்பும் என்று  நினைத்துதான் 
     நான் உன்னை விட்டு பிரிகிறேன் ...  





 http://vatamilan.blogspot.in/2014/09/blog-post_27.html